கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. அதிகாலை முதலே இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வர தொடங்கிவிட்டனர். இதில் மணிரத்னம், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் பொன்வண்ணன் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து காலை 10.25 மணிக்கு நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். ஜோடியின் வரவேற்பு விழா ஜூன்-10ம் தேதியான நாளைய தினம் நடைபெறுகிறது. திருமண பந்தத்தில் இணைந்துள்ள விக்கி – நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதுவரை இந்த இருவரை காதலர்களாக பார்த்த பலரும், இவர்களை கணவன் மனைவியாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடற்கரை மற்றும் பல்வேறு வழித்தடங்கள் வழியாக திருமணத்திற்கு அழைப்பு விடுக்காத மற்ற நபர்கள் திருமணம் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்திடாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.
அதேபோல் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள ஏராளமான திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் முடிந்ததும் புதுமணத்தம்பதிகள் ஹனிமூனுக்கு தான் செல்வர். அதேபோல் நயனும் விக்கியும் ஹனிமூன் கொண்டாட வெளிநாடுகளுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு ஹனிமூனெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டாராம் நயன்தாரா.
அவரது இந்த முடிவுக்கு காரணம் அவர் கைவசம் உள்ள படங்கள் தானாம். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, திருமணம் முடிந்த கையோடு ஷூட்டிங்கிற்கு தான் செல்ல உள்ளாராம். மேற்கண்ட பட வேலைகளை முடித்த பின்னரே ஹனிமூன் செல்ல உள்ளதாம் இந்த காதல் ஜோடி.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.