விக்கி-நயன் திருமணம்.. கடற்கரைக்கு வரும் மக்களை விரட்டும் காவல்துறை.? அதிருப்தியில் பொதுமக்கள்..!

கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரின் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. திருமணத்தில் பங்கேற்பவர்கள் மொபைல்களில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. நயன்-விக்கி ஜோடியின் வரவேற்பு விழா ஜூன்-10ம் தேதியான நாளைய தினம் நடைபெறுகிறது.

அதிகாலை முதலே இவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் வர தொடங்கிவிட்டனர். இதில் மணிரத்னம், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் பொன்வண்ணன் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து காலை 10.25 மணிக்கு நடிகை நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டினார்.

இதுவரை இந்த இருவரை காதலர்களாக பார்த்த பலரும், இவர்களை கணவன் மனைவியாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடற்கரை மற்றும் பல்வேறு வழித்தடங்கள் வழியாக திருமணத்திற்கு அழைப்பு விடுக்காத மற்ற நபர்கள் திருமணம் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்திடாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறபடுகிறது.

உள்ளே செல்பவர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்பது மாதிரியான பலத்த கட்டுப்பாடுகளுக்கு நடுவே திருமணம் நடைபெற்றது. கடற்கரைக்கு வரும் மக்களை விக்கி-நயன் கல்யாணத்துக்கு வந்ததாக நினைத்து விரட்டும் காவல்துறையால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

3 weeks ago

This website uses cookies.