சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதான என்சிபி அதிகாரி ரூ.1 கோடியில் வீடு வாங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னை: சென்னை, வடபழனியில் சிலர் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பதாக சென்னை போலீசாரின் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், வடபழனியில் கடந்த நவம்பர் 28ஆம் தேதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் வந்த கொளத்தூரைச் சேர்ந்த சுரேந்திரநாத் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில், அவர் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பது தெரிய வந்தது மட்டுமல்லாமல், அசோக் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் ஜேம்ஸ் என்பவரும் இவருடன் சேர்ந்து மெத்தபெட்டமைனை செல்போன் செயலி மூலம் விற்று வருவது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சுரேந்திரநாத் மற்றும் காவலர் ஜேம்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னையில் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவில் (NCB) பணியாற்றும் முதல்நிலைக் காவலர்கள் ஆனந்தன் மற்றும் சமீர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் டிஜிட்டல் அரஸ்ட்.. பின்னணியில் சீனர்கள்.. நடப்பது என்ன?
இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இருவரும் தங்களுக்கு கிடைத்திருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் மூலம், பெங்களூருவில் இருந்து மெத்தபெட்டமைனை வாங்கி காவலர் ஜேம்ஸிடம் கொடுத்திருப்பது தெரிய வந்தது.
மேலும், ஜேம்ஸும், சுரேந்திரநாத்தும் சேர்ந்து செல்போன் செயலி மூலம் அதனை விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து காவலர்கள் ஆனந்தனையும், சமீரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணயில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து உள்ளன.
இதன்படி, கைது செய்யப்பட்ட மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவலர் ஆனந்தின் வங்கிக் கணக்கில் 45 லட்சம் ரூபாய் இருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், ஒரு கோடி ரூபாய்க்கு வீடு ஒன்றை வாங்கி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இதனை, அவர் போதைப்பொருள் விற்பனை மற்றும் விற்பனை செய்பவர்களிடம் போலீஸ் எனக் கூறி மிரட்டியும் பெற்ற பணத்தால் வாங்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.