3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வருவது பிஞ்சு நெஞ்சுக்குள் கல்வி குறித்த வெறுப்பை ஏற்படுத்திவிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனை பாஜக பிடித்துக் கொண்டது. நீட் தேர்வு சரியான மருத்துவரை உருவாக்குமா..? என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. அமெரிக்காவிலுள்ள ப்ரோ மெட்ரிக் என்கிற தனியார் நிறுவனம் ஏன் நீட் தேர்வை நடத்துகிறது என அண்ணாமலை விளக்க வேண்டும்.
டாக்டர் ஆக தேர்வு எழுதனும், நீதிபதி தேர்வு எழுதனும், வழக்கறிஞராக தேர்வு எழுதனும், கலெக்டர் மற்றும் போலீசார் ஆக தேர்வு எழுதனும். ஆனால், இவர்களையெல்லாம் கட்டுப்படுத்துகிற ஆட்சியாளர்களாகிய முதல்வர், பிரதமரெல்லாம் என்ன தேர்வு எழுதுகிறார்கள். ஆட்சிக்கு வரக்கூடியவர்கள் எந்த தேர்வும் எழுத தேவையில்லையா?.
கல்வி கட்டமைப்பில் முதலிடத்தில் இருக்கும் தென் கொரியாவில் 8 வயதில்தான் முதல் வகுப்பில் சேர்க்கிறார்கள். ஆனால், இங்கு 8 வயதில் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்கிறார்கள். 3,5,8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்தால் பிஞ்சு நெஞ்சுக்குள் கல்வி குறித்த வெறுப்பை ஏற்படுத்திவிடும். கிராமத்தில் இருக்கும் ஒரு மாணவனும், நகரத்தில் நீட் பயிற்சி பெறும் மாணவனும் ஒரே தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது ஜனநாயக துரோகம், எனக் கூறினார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.