பணி நிரந்தரம் கோரியும், தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் 13 ஆவது நாளாக சென்னையைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் பலர் ரிப்பன் மாளிகையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் அமைச்சர்கள் சேகர் பாபு, கே என் நேரு ஆகியோரின் தலைமையில் போராட்டக் குழுவுடன் மேயர் பிரியா உள்ளிட்ட பலரும் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடரும் எனவும் போராட்டக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே தூய்மை பணியாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது, அனுமதிக்கப்பட்ட இடத்தில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை நடத்திக்கொள்ளலாம், போராட்டம் நடத்தும் இடத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்புள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்து ரிப்பன் மாளிகை முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.