நெல்லை ; 10 ம் வகுப்பு மாணவனை சக மாணவனும், ஆசிரியரும் மாறி மாறி தாக்கியதால் உடல் நலம் குன்றி சிரமப்படும் தனது மகனின் பாதிப்புக்குள்ளானதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி 10நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரசாத், இவரின் மகன் பாரத். பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் 10 வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் பள்ளியில் நடந்த கணித திருப்புதல் தேர்வின்போது தேர்வறையில் அருகில் இருந்த மாணவன் காப்பி அடிக்க தேர்வு எழுதிய பேப்பரை பாரத்திடம் கேட்டு கொடுக்காத நிலையில், அவரின் கழுத்தில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தேர்வறையில் இருந்த கண்காணிப்பாளர் காப்பி அடிப்பதை கண்டு இரு மாணவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படை்தத நிலையில் ஆசியரியர்களும் பாரத்தை பிரம்பால் அடித்து காயப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மாணவன் பாரத்திற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, தொண்டை பகுதியில் நீர் கட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இதன் பேரில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்களும் அடித்ததில் கால் நடக்க முடியாமல் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.
ஆனால் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும், மாணவன் பாரத்தை தாக்கிய ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவன் பாரத்தின் பெற்றோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மனு அளித்துள்ளனர். மாணவர் மற்றும் ஆசிரியர் தாக்கியதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வையும் பாரத் என்ற மாணவன் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வருத்தத்துடன் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.