நெல்லை பாளையங்கோட்டை பள்ளியில் ஆசிரியர் தாக்கியதாக கூறி பிளஸ்1 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பாளையாங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று (கிறிஸ்துராஜா) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் 3 பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆசிரியர் தாக்கியதாக சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
அப்போது, அவர்களிடம் அங்கு உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விசாரித்ததில், ஆங்கில பாடத்தில் மதிப்பெண் குறைவாக எடுத்து தோல்வி அடைந்ததால் தங்களை ஆசிரியர் கிங்ஸ்லி தாக்கியதாகவும், அதனை செல்போனில் வீடியோ எடுத்ததற்காக மீண்டும் தனி அறையில் வைத்து ஆசிரியர் தாக்குதல் நடத்தியதில் கண், தொடை, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர வலி இருப்பதாக கூறினர்.
இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் ஆசிரியர் கிங்ஸ்லி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாகவும், மாணவரை ஆசிரியர் தாக்கிய விவகாரம் தொடர்பாகவும் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.