திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி சமாதானபுரத்தில் இருந்து பாளையங்கோட்டை தினசரி சந்தை பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்தில் இரண்டு பெண்கள், இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து பேருந்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
அவர்களை தொடர்ந்து சிலர் கண்காணித்த நிலையில், அவர்கள் வயதான மூதாட்டி இடம் இருந்து நகைகளை பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. சுதாரித்துக் கொண்டு அங்கிருந்த சிலர் 3 பெண்களைப் பிடிக்க முற்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் இரண்டு பேரை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.
இரண்டு பேரை பிடித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில், இரண்டு பேரும் சேலம் மாவட்டம் மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த ஆஷா மற்றும் வாசுகி என்றும் தெரிவித்துள்ளனர். விசாரணையை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து ஓடும் பேருந்தில் கொள்ளை முயற்சியில் பெண்கள் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
This website uses cookies.