திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு, திமுக மேயர் பேசத் தொடங்கியவுடன், திமுக கவுன்சிலர்கள் இடத்தை காலி செய்ததால் பரபரப்பு நிலவியது.
திருநெல்வேலி மாநகராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சரவணன் மேயராக உள்ளார். மொத்தமுள்ள 55 வார்டுகளில் திமுக கூட்டணி 51 வார்டுகளில் வெற்றி பெற்று உறுப்பினர்களாக உள்ளனர். மேயருக்கும், மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இதனால், மக்கள் நல பிரச்சனைகளில் சரி செய்வதற்கான அனுமதி தருவதற்கு மேயர் காலம் கடத்துவதாகவும், கமிஷன் கூடுதலாக கேட்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சுதந்திர தின நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்து தேசிய கீதம் பாடப்பட்டது. அடுத்து மாமன்ற உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் மேயர் பேசத் துவங்கியவுடன் இடத்தை காலி செய்து வெளியே சென்றனர்.
ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மேயர் அதே கட்சியை சார்ந்த கவுன்சிலர்கள் இடையேயான மோதல் சுதந்திர தின விழாவிலும் எதிரொலித்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.