நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரி செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லா பேருந்தில் பயணிகள் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. வள்ளியூர் பணிமனைக்கு சொந்தமான இந்த அரசு பேருந்தில் இன்று பின்பக்கம் படிக்கட்டு இல்லாததால் பயணிகள் மிகவும் சிரமத்துடன் ஏறி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
மேலும், வயதான பெண்கள், முதியோர்கள் உள்ளிட்ட அனைவரும் முன்பக்க வாசல் வழியே ஏறி இறங்க வேண்டிய சூழல் இருப்பதால் காலதாமதம் ஏற்பட்டு பேருந்து உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லை மண்டலப் போக்குவரத்தில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது படிக்கட்டு இல்லாத மோசமான நிலையில் இருக்கும் பேருந்தை ஆபத்தான நிலையில் இயக்குவது போக்குவரத்து துறையில் அவல நிலையை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
படிக்கட்டு இல்லா பேருந்து குறித்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆகவே நெல்லை மண்டல போக்குவரத்து துறையில் தரமற்ற பேருந்துகளை இயக்குவதை தவிர்த்து பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தரமான பேருந்துகளை இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.