கார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை.. வீட்டை நோட்டமிட்டு போட்ட ஸ்கெட்ச் ; போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
29 April 2023, 10:45 am
Quick Share

நெல்லை சாந்தி நகரில் கார் கம்பெனி ஊழியர் வீட்டில் கதவை உடைத்து 15 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் சாந்தி நகர் 27ஆவது தெருவில் குடியிருந்து வருபவர் அபுதாகிர். இவர் டக்கரம்மாள்புரத்தில் உள்ள ஒரு கார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கேடிசி நகரில் உறவினர் வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்று விட்டு நேற்று இரவு தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

மேலும் தன் வீட்டின் பீரோவில் இருந்த 15 சவரன் நகை இரண்டு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அபுதாகிர் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அந்த தகவலின் பேரில் நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் பொறுப்பு வாசிவம் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் தடவியல் நிபுணர்களும் வீட்டில் கைரேகைகளை சேகரித்தனர்.

இது குறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 264

0

0