திருநெல்வேலி ; திருநெல்வேலியில் அருகே மேல கருங்குளம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைக்கப்பட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையம் அருகில் உள்ள மேலக்கருங்குளம் கிராமத்தில் விவசாய தோட்டங்கள் அதிகம் இருக்கும் இப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நாய்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் பல வீடுகளில் நாய்கள் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இன்று காலையில் மேலக்கருங்குளம் ஊர் முழுவதும் ஆங்காங்கே 20க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து கிடத்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல நாய்கள் நீர் நிலைகளில் இறந்து கிடப்பதால் விஷம் நீரில் கலந்திருக்கும் அபாயம் ஏற்பட்டள்ளது. அதை மற்ற விலங்குகள் அருந்தும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உயிரிழந்த நாய்களை போஸ் மார்டம் செய்து விஷம் வைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.