Categories: தமிழகம்

மகளின் தவறான தொடர்பை பற்றி கூறிய அக்கா மகனை அடித்தே கொன்ற தாய்மாமன் : தலைமறைவான அத்தையை தேடும் போலீஸ்!!

வேலூர் : பாலிடெக்னிக் மாணவணை உண்மையை சொல்லியதற்காக தாய்மாமன் குடும்பத்தார் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஜெய்சங்கர் நாயுடு மகன் தருண் குமார் (வயது 20). இவர் காட்பாடி அடுத்த சின்ன லத்தேரியில் உள்ள அவரது தாய் மாமா ரமேஷ் (வயது 45 ) என்பவர் வீட்டில் தங்கி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் ரமேஷின் மகள் வேறு யாருடனோ போனில் பேசுவதாக தருண்குமார் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தருண்குமாரை தாக்கினார். இதுபற்றி அவர் பெங்களூரில் உள்ள அவரது பெற்றோரிடம் தெரிவித்தார்.

தருண்குமாரின் தாயார் கிரிஜா லத்தேரிக்கு வந்து மகனை தாக்கியது குறித்து அவரது சகோதரர் ரமேஷிடம் தட்டிக் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், ரமேஷின் மனைவி சதிஷ்வரி (வயது 38) மகன் நவின் (வயது 16) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தருண்குமாரையும் அம்மா கிரிஜா, ஆகியோரை தென்னை மட்டையால் சராமாரியாக தாக்கியுள்ளனர். அப்பகுதி மக்கள் தடுத்தும் தாக்கிக் கொண்டே இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அனைவரையும் சமாதானப்படுத்தினர்.

இதில் படுகாயமடைந்த தருண் குமாரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி தருண் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லத்தேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

தலைமறைவாக இருக்கும் ரமேஷின் மனைவி சதீஷ்வரி மகன் நவீன் இருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தருண் குமாரின் தாயார் கிரிஜா ரமேஷின் மனைவி சதீஷ்வரி நவீன் ஆகிய இருவரும் கைது செய்யாமல் உடலை எடுக்க மாட்டோம் என்று கூறினர்.

இறந்த மாணவன் அருண்குமார் உடன் பயின்ற பெங்களூரு மாணவர்கள் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நண்பரின் உடலைப் பார்த்து கண்ணீர் விடும் காட்சி அப்பகுதியில் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

12 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

14 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

14 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

15 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

15 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

16 hours ago

This website uses cookies.