மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புளிப்பட்டி உள்ளிட்ட பத்திற்கு மேற்பட்ட கிராம பகுதியில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதனை எதிர்த்து மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இன்று மேலூரில் மதிமுக தலைவர் வைகோ, இந்த பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை எதிர்த்து கண்டன கூட்டத்தில் பேசினார்.
இதில் பேசிய வைகோ அணில் அகர்வால் கூட்டத்தினை மதுரை மண்டலத்திற்கு நுழைய விட மாட்டோம் எனவும் தமிழக மண்ணை பாதுகாக்கும் சூழலில் எங்கள் அணியினர் முழுமையாக நின்று எதிர்த்து பாதுகாப்போம் எனவும் பேசினார்.
மேலும் ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு போராடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இதேபோன்று, 3000 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க அரிட்டாபட்டி உள்ளிட்ட தொன்மையான கிராமங்கள் மற்றும் இந்த பகுதி விவசாயிகளை பாதுகாக்கவும், தொடர்ந்து பல்வேறு கட்டமாக போராட இருப்பதாகவும் பேசினார். இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.