தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை: தமிழ்நாடு காவல்துறை மற்ரும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கடந்த மே 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இதனால், இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி வந்தார். ஆனால், கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து, மதுரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செங்கமல செல்வன், சவுக்கு சங்கரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை அடுத்து, சென்னையில் வைத்து சவுக்கு சங்கரை தேனி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்: இது மீண்டும் பரபரப்புக்கு உள்ளானது. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்கில் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில் இருந்தவாறே கைது செய்யப்பட்டு உள்ளார். இதன்படி, தூய்மைப் பணியாளர், தமிழக அரசின் திட்டம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டுப் பேசியதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
முன்னதாக, சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. எனவே, இந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீது நடைபெற்ற விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.