கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் புதிய சர்ச்சை.. பராமரிப்பு பணியில் புனே மாநில நிறுவனம் : திமுக அரசுக்கு புதிய தலைவலி!
சென்னை மாநகரை விட்டு செங்கல்பட்டுக்கு முன்னதாக 25 கி.மீ. தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது வட சென்னையில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக சென்னையில் குடியிருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நினைக்கவே முடியாத துயரத்துக்கு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது என்பதுதான் குமுறல்.
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, இப்பேருந்து நிலையத்தில் தேவைப்படும் நிலையில் அம்மா உணவகம் அமைக்கப்படும். பயணிகள் வசதிக்காக கூடுதல் பேட்டரி கார் ஏற்பாடு செய்யப்படும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்திருக்க புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
ஆனால் கிளாம்பாகத்திலேயே தங்களது சுமைகளுடன் இறங்கும் தென் மாவட்ட மக்கள், துயரமில்லாமல் சென்னையின் பல பகுதிகளுக்கு செல்ல போதுமான பேருந்துகளை குறைந்த கட்டணத்தில் இயக்குவதுதான் சற்றேனும் ஆறுதலாக இருக்கும் என்பதுதான் தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
அதேபோல தனியார் நிறுவனம் வசம், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பை ஒப்படைப்பது நடைமுறையில் பயணிகளுக்கு வசதிகளை தரப் போகிறதா? துயரத்தை தரப் போகிறதா? என்பதும் தெரியலையே என்கிற விவாதமும் எழுந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.