கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கக்கூடிய சாய்பாபா காலனியில் புதிய மேம்பாலம் கட்டும் பணியானது விரைவில் தொடங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இதற்காக கோவை நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு 4 வழிச்சாலை மேம்பாலத்திற்கு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து 1.2 கிமீ தூரத்திற்கு இந்த மேம்பாலம் அமைக்கப்படும் என்று தகவல் வெளியானது.
இதற்காக சுமார் 71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் கங்கா மருத்துவமனை அருகே தொடங்கி கோவை சாய்பாபா காலனி பேருந்து நிலையத்தில் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் முதல்கட்டமாக சாய்பாபா காலனி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. அழகேசன் சாலை சந்திப்பு முதல் எருகம்பெனி சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ தொலைவுக்கு (975 மீட்டர்), 16.61 மீட்டர் அகலத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
15 முதல் 20 தாங்கு தூண்கள் அமைக்கும் பகுதியில் பணிகள் தொடங்கியுள்ளது. இதற்காக இரண்டு பகுதிகளிலும் 7 மீட்டர் அகலத்தில் போக்குவரத்துக்கு வழி விடப்பட்டுள்ளது
வரும் 2026ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க கட்டுமானப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இது தவிர மேட்டுப்பாளையம் சாலை சங்கனூர் பாலம் பகுதியில் ரவுண்டானா உடன் கூடிய மேம்பாலம் அமைக்கவும், சிங்காநல்லூர், சத்தி ரோடு – துடியலூர் சந்திப்பில் மேம்பாலங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.