புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு!!
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு உயர்வு கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படவுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது, இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள் 17 A, 17 8 பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கக் கூடாது.
தண்டனை காலம் முடிவடையாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எந்த புகாருக்கும் உள்ளாகாத பதவி உயர்வுக்கு ஆசிரியர்களை மட்டும் பரிந்துரைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்ல விரும்பும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும்.
அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பமுடையவர்கள் சார்பான கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படுவர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.