திருமணமாகி 15 நாட்களில் சாப்ட்வேர் பெண் உழியர் மர்மமான நிலையில் உயிரிழந்தது குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனந்தராமன் – ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இந்துஜா 27 என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந்துஜா ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக இவர், பெரம்பூர் ஜமாலயா எஸ்பிஐ காலனியை சேர்ந்த ஹரிகரன் (30) என்ற நபரை காதலித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி இரு வீட்டார் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஹரிஹரன் வடபழனியில் உள்ள வணிக வளாகத்தில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், மதியம் 1:30 மணியளவில் தனது கணவர் வீட்டில் இந்துஜா வொர்க் ஹோம் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார், அப்போது வீட்டில் இருந்த இந்துஜாவின் கணவர் ஹரிகரன் இந்துஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிஹரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இது குறித்து இந்துஜாவின் பெற்றோரும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இந்துஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இது குறித்த ஒட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஓட்டேரி போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று இந்துஜாவின் உடலை ஆய்வு செய்து பிரேத பரிசோதனைக்கு போலீசார் இந்துஜாவின் உடலை உட்படுத்தி உள்ளனர்.
மேலும், திருமணம் ஆகி 15 நாட்கள் மட்டுமே ஆவதால் இந்த வழக்கை ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்நிலையில் இந்துஜாவின் தாயார் ஆனந்தி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும் எனவும் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து, திருமணம் ஆகி 15 நாட்களில் ஆன பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணைக்கு போலீசார் மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆர்டிஓ முன்னிலையில் பிரேதத்தை வைத்து உடல் கூறு செய்ய உள்ளதால் விசாரணைக்குப் பின்னரே பெண் உயிரிழந்தது குறித்து தெரியவரும்..
திருமணமாகி 15 நாட்களில் பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.