காஞ்சிபுரம் : கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத ரேஷன் கடையில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுகாவேரிப்பாக்கம் பஞ்சாயத்து உட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள்.
இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலித் தொழில் செய்து வருகின்றார்கள். ரேசன் பொருட்களை வாங்குவதற்கு நெடுஞ்சாலையை கடந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும்.
அதிமுக ஆட்சியில் சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரேசன்கடை கட்டப்பட்டது. தேர்தல் நேரத்தில் ரேஷன் கடை திறப்பது தள்ளி போனது. தேர்தல் முடிந்தவுடன் ரேஷன் கடை திறக்கப்படும் என கூறி 12 மாதம் கடந்து விட்டதால் தற்போது அந்த ரேஷன் கடை சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது.
அந்த திறக்கப்படாத ரேஷன் கட்டிடத்தில் மதுபானம் அருந்துவதன் கஞ்சா புகைப்பதும் வேதனைகள் நடப்பதும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதனால் முத்து மரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் ரேஷன் கடை கட்டிடத்தின் முன்பு நின்று கடையை திறக்க கோரி கோஷமிட்டனர்.
இது சம்பந்தமாக அப்பகுதி பெண்கள் கூறும்போது, ரேஷன் கடை திறப்பதாக கூறி பல மாதங்கள் ஆகிவிட்டது. தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கூட கொடுத்தார்கள். ஆனால் இன்றைய தேதி வரை திறக்கப்படவில்லை.
அதனால் நாங்கள் நெடுஞ்சாலையை கடந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று தான் பொருட்கள் வாங்க வேண்டும். அங்கும் ஒரே நேரத்தில் பொருட்கள் அளிப்பதில்லை. 4 அல்லது 5 முறையாவது செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே அதிக மக்கள் தொகை கொண்ட எங்கள் கிராமத்தில், நீண்ட நாட்களாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இந்த ரேஷன் கடை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.