கோவை : பிரபல தனியார் செய்தி நிறுவனத்தின் புகைப்பட கலைஞரை மதுபோதையில் பக்கத்து வீட்டுக்காரர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியின் (தினத்தந்தி) புகைப்பட கலைஞர் விவேக் கோவை புதூரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே தனது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்துவதற்காக, புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்து பார்க்கிங்கை தயார் செய்துள்ளார்.
அந்த இடத்தில் அவருடைய வீட்டு அருகே இருந்த ஒரு நபர் காரை கொண்டு நிறுத்திவிட்டாராம். அதனால், இரவு ஏழு மணிக்கு வந்த விவேக் அவரிடம் தங்களது காரை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார். அவர் நான் எடுத்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இவரும் அதைப்பற்றி கேட்கவில்லை.
இரவு 12 மணி அளவில் மது போதையில் வந்த அந்த நபர் விவேக்கின் வீட்டை தட்டி, “நாங்கள் அப்படித்தான் எங்களது காரை நிறுத்துவோம். உனக்கு என்ன வந்தது,” என்று கூறி விவேக் பலமாக கட்டையாலும், கல்லாலும் தந்தையும் மகனும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக கேட்டதற்கு, ‘நாங்கள் எல்லாம் திமுக கட்சியை சார்ந்தவர்கள். எங்களை உன்னால் ஒன்னும் பண்ண முடியாது. வழக்கு பதிவு செய்தாலும், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்,’ என்று சொல்லி உள்ளனர்.
இதனிடையே, அவர்கள் தாக்கியதில் மயங்கிய விவேக்கை, பக்கத்து வீட்டார் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். அங்கிருந்து தற்பொழுது கங்கா மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
கார் நிறுத்தும் விவகாரத்தில் செய்தியாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.