கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை நேரில் அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு வழக்கு சம்பந்தமாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 13 வது நபராக அசாருதீன் என்பவர் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் கொச்சி சிறையில் வேறொரு வழக்கு சம்பந்தமாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இவ்வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற அனுமதி பெற்று NIA அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அசாருதீனை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் 12வது நபராக கைது செய்யப்பட்ட இத்ரீஸ் என்பவரையும் விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.
கோவையில் அவ்வப்போது இவ்வழக்கு சம்பந்தமாக கைது செய்யப்பட்டவர்களை நேரடியாக அழைத்து வந்து அவர்களது இல்லங்களிலும் பல்வேறு இடங்களிலும் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.