மதுரையில் முகமது தாஜுதீன் அஜ்மல் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை – பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள காஜிமார் தெருவில் முகமது தாஜூதீன் அஜ்மல் என்பவரது வசித்து வருகிறார். இவர், இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.
இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்ஐஏக்கு தகவல் வந்துள்ளது. அவர்களுடன் இவர் தொடர்பில் இருந்தாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், முகமது தாஜுதீன் அஜ்மலின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் தாஜூதீன் அஜ்மல் என்பவரிடம் விசாரணை நடத்த சென்ற நிலையில், அவர் வீட்டில் இல்லாததால் என்ஐஏ அதிகாரிகள் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி பாஸ்போர்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முகமது தாஜுதீன் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த சோதனை நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரையின் மிக முக்கிய வீதியான காஜிமார் தெரு முழுவதும் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.