நீலகிரி ; முதுமலை புலிகள் காப்பகம் அருகே இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடியின் வீடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வரத் தொடங்கி உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் கரடி, புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டத்தை காண முடிகிறது.
இந்நிலையில் மாயார் சாலையில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. சாலையோரத்தில் இருந்த இலந்தை பழம் மரத்தில் ஏறி பழங்களை சாப்பிட முயன்றது. இந்த காட்சிகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். தற்போது கரடி மரத்தில் ஏறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இவ்வாறு சாலை ஓரங்களில் வரும் வனவிலங்குகளை எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.