முதுமலை வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வாகனத்தை தாக்க சென்ற யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்போது கடும் வரட்சி நிலவுகிறது. இதனால், காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் குடிநீர் தேடி பிரதான சாலைகளை அடிக்கடி கடந்து செல்கின்றன. மாலை நேரங்களில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் சாலைகளில் பயணிக்கின்றனர்.
மேலும் படிக்க: முதலமைச்சருக்கு நெருக்கமானவர் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணம் : ரூ.3.60 கோடி பறிமுதல் செய்ததால் பரபரப்பு!!
இந்த நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் சுற்றுலா பயணிகள் செல்லும் பொழுது இரண்டு காட்டு யானைகள் சாலையை கடக்க வந்தன. அந்த சமயம், திடீரென சுற்றுலா பயணிகள் வாகனத்தை கண்ட காட்டு யானை புழுதி பறக்க வாகனத்தை தாக்க ஓடி சென்றது. அப்போது சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் கூச்சலிட்டனர்.
பின்பு சுற்றுலாப் பயணிகள் வேகமாக வாகனத்தை எடுத்து தப்பித்தனர். இதனால் காட்டு யானையிடமிருந்து நூலிழையில் சுற்றுலா பயணிகள் தப்பித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.