Categories: தமிழகம்

NIT பாலியல் அத்துமீறல் விவகாரம்.. மாணவிகளை கண்டித்த பெண் காப்பாளர் எடுத்த முடிவு..!

திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது, ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும்போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.

இதுகுறித்து விடுதி வாடனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரை குறைவாக வாடன் பேசியதாக தெரிகிறது. இதனால், வார்டன் மீதும் ஒப்பந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விடிய விடிய நடந்தது.

அதே சமயம் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு உள்ளனர்.

இருந்த போதும் அவர்கள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்திலும் கூறியுள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கல்லூரி நிர்வாகமும் தெரிவித்துள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கதிரேசன் என்கிற ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதையடுத்து, விடுத்துக் காப்பாளர் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறினார்.

அதன் பின்னர், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதியின் பெண் காப்பாளர் பேபி தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மற்ற விடுதி காப்பாளர்கள் சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியயோர் திங்கள் அன்று ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.