திருச்சி என் ஐ டி மாணவிகள் விடுதியில் அவர்களின் வசதிக்காக ஒவ்வொரு அறையிலும், இணையதள சேவை அளிப்பதற்காக நேற்று காலை ஒப்பந்த ஊழியர்கள் ஐந்து பேர் சென்றுள்ளனர். அப்போது, ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும்போது இணையதள சேவை அளிப்பதற்காக வந்த ஊழியர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட மாணவி வெளியே ஓடிவந்து சத்தம்போட்டுள்ளார்.
இதுகுறித்து விடுதி வாடனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரை குறைவாக வாடன் பேசியதாக தெரிகிறது. இதனால், வார்டன் மீதும் ஒப்பந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விடிய விடிய நடந்தது.
அதே சமயம் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு உள்ளனர்.
இருந்த போதும் அவர்கள் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்திலும் கூறியுள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கல்லூரி நிர்வாகமும் தெரிவித்துள்ளது. பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கதிரேசன் என்கிற ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதையடுத்து, விடுத்துக் காப்பாளர் பேபி என்பவர் மாணவர்கள் மத்தியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறினார்.
அதன் பின்னர், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்நிலையில், திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் விடுதியின் பெண் காப்பாளர் பேபி தன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார். மற்ற விடுதி காப்பாளர்கள் சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியயோர் திங்கள் அன்று ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.