தமிழகம்

FIRE ஆட்டம்…புஷ்பா ஸ்டைலில் மாஸ் காட்டிய நிதிஷ் ரெட்டி…திணறிய AUS பவுலர்கள்..!

நிதிஷ் குமார் சாதனை – ரசிகர்கள் உற்சாகம்

AUS VS IND மெல்போர்ன் டெஸ்ட் மேட்சில் இன்றைய 3-ஆம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியா பவுலர்களை நாலா புறமும் சிதறடித்து,தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

இன்றய நாள் ஆட்டத்தின் போது சிறிது நேரத்தில் ரிஷப் பந்த்,ஜடேஜா இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து,இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது.அப்போது ரிஷப் பந்த் அடித்த தவறான ஷாட்டை,நேரலையில் கமெண்ட்ரி பண்ணிட்டு இருந்த முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கடுமையாக கண்டித்தார்.

முட்டாள்…முட்டாள்…ரிஷப் பந்துக்கு இந்த ஷாட்டை தவிர வேற எதும் தெரியாது, இப்படியே ஆடிட்டு இருந்தால் கூடிய விரைவில் வெளியே உட்கார வேண்டிதான் என ஆக்ரோஷமாக பேசினார்.

இதையும் படியுங்க: தம்பி ஓரளவுக்கு தான் கொல காண்டில் விராட்கோலி…ஷாக் ஆன ஆஸ்திரேலியா ரசிகர்கள்…!

அதன்பின்பு களத்தில் பொறுமையாக ஆடி வந்த நிதிஷ் மற்றும் வாஷி ரன்களை மெது மெதுவாக குவித்தனர்.நிதிஷ்குமார் தனது முதல் அரைசதத்தை அடித்தவுடன் புஷ்பா அல்லு அர்ஜுன் ஸ்டைலில் கொண்டாடினார்.மறுபக்கம் தமிழக வீரரான வாஷியும் அவருடைய அரை சதத்தை பூர்த்தி செய்து பெவிலியன் திரும்பினார்.

நிதிஷ் குமார் ரெட்டி தன்னுடைய முதல் சதத்தை நெருங்கும் போது அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் ஆட்டம் விறுவிறுப்பானது.அவர் 99 ரன்களில் இருக்கும் போது பவுண்டரி அடித்து,தன்னுடைய முதல் சதத்தை மெல்போர்ன் மண்ணில் ருசித்தார்.

அப்போது மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள்,அதிலும் குறிப்பாக அவருடைய அப்பா சந்தோசத்தின் எல்லைக்கே சென்றார்.பின்பு,போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் இன்றைய 3-ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது .இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை குவித்துள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.