Categories: தமிழகம்

கோவையில் ‘லொல் லொல்’ தொல்லை இனி இல்லை : மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.. பொதுமக்கள் நிம்மதி!!

கோவையில் ”லொல்.. லொல்..” தொல்லைக்கு கோவை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தக்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

கோவை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தெருநாய்கள் வீதிகளில் விளையாடும் குழந்தைகளை அவ்வப்போது கடித்து விடுகின்றன.

மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் பதட்டமடையும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே நாய்கள் கருத்தடை மையத்தை மீண்டும் செயல்படவைக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே உக்கடம் புல்லுக்காடு பகுதியில் புனரமைக்கப்பட்ட நாய்கள் கருத்தடை மையத்தை மாநகராட்சி மேயர் கல்பனா இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் சீரநாய்க்கன்பாளையம், ஒண்டிப்புதூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நாய்கள் கருத்தடை மையங்கள் மூலம் கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 2300 ஆதரவற்ற நாய்களை பிடித்து சட்டப்படி கருத்தடை செய்துள்ளனர்.

இவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை ரூ.445 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. செப்டம்பர் மாதம் முதல் ரூ.700 ஆக ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது, சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் கால்நடைகளை பிடிப்பதற்கும் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனம் ஆதரவற்ற கால்நடைகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்ல பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் வெற்றிச்செல்வன், துணை கமிஷனர் ஷர்மிளா, சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

30 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

34 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

55 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.