திண்டுக்கல் : விவசாயத்தால் விவசாயிகளுக்கு எந்த ஒரு வருவாயும் இல்லை., சாலை விரிவாக்க திட்டத்தின் விவசாய நிலத்தின் விலை பன்மடங்கு உயர்கிறது என்று முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்ட விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரு வழி சாலையை நான்கு வழிச்சாலையாக்கும் சாலை விரிவாக்கப் பணி துவக்க விழா செம்பட்டி – ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் விசாகன் தலைமையில் நடைபெற்ற இந்த சாலை விரிவாக்க துவக்க விழாவினை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இதில் மெட்டூர், பலக்கனூத்து, ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூர் சாலை வழித்தடங்களை இரு வழி சாலையிலிருந்து நான்கு வழி சாலையாக புதிய சாலை விரிவாக்க பணியை துவக்கி வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது :
நான்கு வழி சாலை அமைப்பதனாலேயே அனைத்து இடங்களும் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதில் விவசாய நிலங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், விவசாயிக்கு விவசாயத்தால் எந்த ஒரு வருவாயும் இல்லை. ஆனால், அவர்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பொழுது அருகிலுள்ள விளைநிலங்களின் விலை உயர்கிறது இதுவே எதார்த்த நிலையும் ஆகும் என்று கூறினார்
.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆத்தூர் கிழக்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி கன்னிவாடி ஊராட்சி மன்ற தலைவர் சிவகுரு மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மாரிமுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பாஸ்கரன் போக்குவரத்து துறை மின்வாரியத் துறை ஊழியர்கள் சீவல்சரகு ஆத்தூர் அக்கரைப்பட்டி கன்னிவாடி உள்ளிட்ட ஊராட்சிகளில் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.