திமுகவில் எத்தனை கட்சிகள் கூட்டணி போட்டாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது : முன்னாள் எம்பி பேச்சு!
திருவள்ளூர் மாவட்டம் அருமந்தையில் அதிமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாநில மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் முன்னாள் எம்பி கலந்து கொண்டு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வருவது என்றால் அதிமுகவில் மட்டும்தான் முடியும் என்றும் திமுகவில் அமைச்சரின் மகன் வாரிசுகள் குடும்பத்தினர் மட்டுமே எம்பியாகவும் எம்எல்ஏவாகவும் வர முடியும் என்றும் அதிமுகவில் உழைத்தால் உயர்ந்த பதவிக்கு சாதாரண தொண்டனும் வரமுடியும் என்றும்
15 கட்சி கூட்டணி வந்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது என பேசினார்.
மேலும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை உரிமைத்தொகை
வெள்ள நிவாரணம் போன்றவை முறையாக வழங்கவில்லை என்றும்
அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கி போராடிக் கொண்டிருப்பதாகவும்
போக்குவரத்து தொழிலாளர்கள் மாணவர் சமுதாயம் போராடிக் கொண்டிருப்பதாகவும், பெண்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர், கச்சத்தீவு காவேரி பிரச்சனை மீத்தேனில் கையெழுத்து இட்டது என அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு எல்லா உரிமைகளையும் காவு கொடுத்துவிட்டு உரிமை மீட்பு மாநாடு நடத்துவதாகவும் அவர் தெரிவித்தார் .
பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் தையல் இயந்திரம்
இஸ்திரி பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில்
மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.