Categories: தமிழகம்

பாஜக ஒரு ரவுடி கட்சி… எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது : அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் சவால்!

பாஜக ஒரு ரவுடி கட்சி… எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது : அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் சவால்!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தேர்தல் பணிக்குழு சிறப்பு முகாம் (04-10-2023) இரவு நடைபெற்றது. கூட்டத்தில் நிலக்கோட்டை சட்டமன்ற அதிமுக உறுப்பினர் தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, பேரூர் கழக செயலாளர்கள் நிலக்கோட்டை சேகர், அம்மையநாயக்கனூர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை பொதுச் செயலாளரும், திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியில் இருந்த பி.ஜே.பி விலகிச் சென்றதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அதிமுக வெற்றிக்கு பிஜேபி தடையாக இருந்தது. பிஜேபி அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் நாம் இப்போது வெற்றி நடை போட்டு வருகிறோம்.

பிஜேபி நம்மளோடு இருந்தது காலில் ஒரு கட்டையை கட்டிக்கொண்டு ரேசில் ஓடியது போல் இருந்தது. அதிமுக வெற்றிக்கு பொதுமக்கள், தொண்டர்கள் சரியாக உள்ளனர். நமது வெற்றி இலக்குக்கு இடையூறாய் இருந்தது பிஜேபி ஒன்று மட்டும்தான் அந்தத் தடையும் இன்று நீக்கப்பட்டு விட்டது.

இனிமேல் அதிமுக வெற்றியே தடுப்பதற்கு எந்த கொம்பனாலும் முடியாது. இரண்டு ஆண்டுகள் கூட அரசியல் அனுபவம் இல்லாத கத்துக்குட்டி அரசியல்வாதியை வைத்துக்கொண்டு எல்லாத்தையும் தெரிந்தது போல் இருந்து கொண்டு ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, நம்மை கடித்துவிட்டார்.

கூட்டணியில் இருந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மாவை விமர்சனம் செய்கிறார். கூட்டணி தர்மத்தை தெரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டார். அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகாவது, அவர் திருந்துவார் என்றால் திருந்தவில்லை.

மேலும் நமது நிறுவனத் தலைவர் அண்ணாவையே விமர்சனம் செய்து வருகிறார். இந்த தைரியத்தை அவருக்கு கொடுத்தது யார்? தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் பிஜேபி தலைவர் அண்ணாமலை செய்து வருகிறார்.

மோடியை பத்தி பேசாமல் மாநிலத்தில் அண்ணாமலை பெயர் மட்டும் தான் சொல்லணும், தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் என்ற அரசியலை அவர் கையில் எடுத்துள்ளார். என் மண், என் மக்கள், தவறான தலைப்பு. இதை நாம் ஆதரிக்க கூடாது என்று நான் சொன்னேன். கர்நாடகாவில் காக்கிச்சட்டை போட்ட போலீஸ் அண்ணாமலைக்கு இந்த மண் அவருக்கு மட்டும் சொந்தமா? நேற்று மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்து என் மண், என் மக்கள் என்று உரிமை கொண்டாடினால் அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? நமது தலைவர்களையே விமர்சனம் செய்து கொண்டிருக்கும் போது நாம் அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா? அதிமுகவுக்கான கொள்கை இருக்கிறது. குறிக்கோள் இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. நமக்கு நிறைய நெறிமுறைகள் இருக்கிறது. நமது கொள்கையில் முரண்பாடு அவர்களுக்கு உள்ளது. இதனால் நாம் அவர்களோடு சேர்ந்து பயணிக்க முடியாது.

என்னை பொருத்தவரை ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதியாகதான் அண்ணாமலையை பார்க்கிறேன். அனுபவம் இல்லாதவர் அவருக்கு அரசியல் முதிர்ச்சி அரசியல் பக்குவம் வரவில்லை. எதற்காக இந்த கூட்டணி முறித்தோம் என்பதற்காக இதை சொல்லி வருகிறேன்.
தமிழ்நாட்டில் பாதி ரவுடிகள் உள்ள கட்சி பிஜேபி. கட்டப்பஞ்சத்துக்காரன், கந்து வட்டிக்காரன் தான் பிஜேபியில் உள்ளான். பிஜேபி பழைய பிஜேபிகாரர்கள் இவருடைய ஆட்டம் பாட்டத்தை விரும்பவில்லை. எந்த இடத்திலும் பிஜேபி டெபாசிட் வாங்காது. பிஜேபிக்கு சொந்த காலில் நிற்கும் சக்தி கிடையாது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் அவர் சக்தி என்ன என்று அவர்களே தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு தொடர்ந்து கூட்டம் முடியும் வரை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையே பற்றியே முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

3 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

3 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

4 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

5 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

5 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

6 hours ago

This website uses cookies.