சென்னை தலைமை செயலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் மாவட்ட அளவிலான அனைத்து துணை ஆணையர் (கலால்) மற்றும் உதவி ஆணையர்களுடனான (கலால்) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையிலான இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மதுக்கடைகள், மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணித்து, களஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளின் மெத்தனால் உரிய உரிமதாரர்களுக்கு விற்கப்படுகிறதா என்பதையும் தொழிற்சாலை உற்பத்திக்கு மட்டுமே எத்தனால் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையுடன் இணைந்து கண்காணிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிமாநில மது, கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.