Categories: தமிழகம்

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!

ரூ.5 கோடி கொடுத்தாலும் தேவையில்லை… கடலூரில் மாபெரும் மறியல் போராட்டம் : அன்புமணி அறிவிப்பு!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனம், 2வது சுரங்க விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்தும் பணியை கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு என்எல்சி நிர்வாகம் தொடங்கியது. அதன்படி, மேல்வளையமாதேவி கிராமத்தில் விளை நிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி நடைபெற்றது.

விளை நிலங்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது என்எல்சி நிர்வாகம் பணி தொடங்கியுள்ள இடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கையகப்படுத்தப்பட்ட நிலம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சமயத்தில், நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கிய என்எல்சி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் தலைவர்கள் பலர் குரல் எழுப்பி வருகின்றனர்.

அந்தவகையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக இன்று பாமக சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அக்கட்சி தலைவர் அறிவித்திருந்தார். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இன்று நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் போராட்டம் நடத்தப்படும்.
விளைநிலங்களை அழித்தால் வருங்காலத்தில் உணவு கிடைக்காது. என்எல்சி நிறுவனம், விவசாய நிலங்களுக்கு இழப்பீடாக எவ்வளவு கொடுத்தாலும் தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக என்எல்சி முற்றுகை போராட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதனால் தீவிர கட்டுப்பாட்டில் கடலூர் மாவட்டம் உள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

இந்த முற்றுகை போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், என்எல்சி தனது பணியை தொடர்ந்தால் நாளை கடலூர் மாவட்டத்தில் சாலை மறியல் நடைபெறும்.

கடலூர், விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை சாலை மறியல் நடத்தப்படும். 5 கோடி கொடுத்தாலும் எங்களுக்கு தேவையில்லை. என்எல்சி பிரச்சனை கடலூர் மாவட்ட பிரச்னை இல்லை, இது தமிழ்நாட்டின் பிரச்னை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

38 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

4 hours ago

This website uses cookies.