நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : கோவையில் 2-வது நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை…

Author: kavin kumar
29 January 2022, 10:23 pm
Quick Share

கோவை : நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட 2 வது நாளாக இன்றும் கோவை மாநகராட்சியிலிருந்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

28 ஆம் தேதி துவங்கிய காலை 10 மணியளவில் வேட்புமனு தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனு தாக்கலை பெறுவதற்காக மாநகராட்சியில் 5 மண்டங்களிலும் மண்டல வாரியாக தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையை பொறுத்தவரை கோவை மாநகர பகுதியில் உள்ள 100வார்டுகளுக்கு 5 இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இதே போல கோவை புறநகர் பகுதியில் உள்ள 7 நகராட்சிகள்,33 பேரூராட்சிகள், அந்த அந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்காக வேட்புமனு பெருவதற்காகவும், தாக்கல் செய்வதற்காகவும் அலுவலர்கள் காத்திருந்த நிலையிலும், 2 வது நாளிலும் மாநகராட்சியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நகராட்சிகளிலும் இல்லாத நிலையில், பேரூராட்சிகளில் 2 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள், மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளில் 198 கவுன்சிலர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளில் 533 கவுன்சிலர்கள் என மொத்தம் 831 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 1317

0

0