தமிழக அரசு சார்பாக தனக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை என ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்த திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் குருசலாப்பட்டு பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் தமிழ்நாட்டில் இருந்து பங்களாதேஷிற்கு அசோக் லேலண்ட் லாரி சேஸ்களை எடுத்துச் செல்லும் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சம்பவம் நடைபெற்ற அன்று ஹௌராவிலிருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை திரும்பும் பொழுது, ஒடிசா அருகே ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி இடுப்பு மற்றும் கால் பகுதிகளில் காயம் அடைந்தார்.
இந்த நிலையில் அவரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மூலமாக சிறப்பு ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பப்பட்டு சென்னையில் எந்த விதமான மருத்துவ உதவிகளும் செய்யாமல் தன்னை உடனடியாக டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதனால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு, தற்போது சொந்த ஊர் திரும்பிய நிலையில், இதுவரை தமிழ்நாடு அரசு சார்பாக எந்த விதமான உதவியும் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.