இன்றே கடைசி… புரட்டாசி வருது… மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் குவிந்த அசைவப் பிரியர்கள்!!
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1200க்கு மேற்பட்ட விசைப்படகுகள், 800-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ மக்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்
வழக்கமாக விடுமுறை தினத்தன்று அதிக அளவிலான மக்கள் மீன்கள் வாங்குவதற்காக காசிமேடு மீன் சந்தையில் குவிந்து வருவார்கள். அத்துடன் இன்று ஆவணி மாதத்தின் கடைசி நாளாகும்.
நாளை புரட்டாசி மாதம் தொடங்குகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை தவிர்ப்பார்கள். ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிட முடியாது என்பதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் இன்று காசிமேடு மீன் சந்தையில் மீன்கள் வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்து வருகின்றனர்.
அதே வேளையில், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. வஞ்சிரம் ரூ.500. வவ்வால் ரூ350, சங்கரா ரூ.300, இறால் ரூ.250, கடமா ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.