போலீஸ்காரரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. போதையில் அராஜகம் ; வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கம் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆயுதப்பூஜை கொண்டாடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 200 வடமாநில இளைஞர்கள், மதுபோதையில் இருபிரிவுகளாக பிரிந்து மாறிமாறி தாக்கி ககொண்டனர்.
இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய தலைமை காவலர் ரகுபதி (52) மற்றும் காவலர்கள் ராஜ்குமார், கிரி ஆகியோர் இரு பைக்குகளில் வந்தனர். அப்போது, அங்கு மோதலில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை தடுக்க முயன்றனர்.
அந்த சமயம் போதையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களின் வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த காவலர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
வாடகைக்கு ஆட்களைப் பிடித்து, திமுக புகழ் பாடச் சொன்னால் மட்டும் போதாது செயலிலும் இருக்க வேண்டும் என திமுக அரசை…
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. தனுஷ் தனது…
டிரெண்டிங் இசையமைப்பாளர் தமிழ் சினிமா உலகில் தற்போது டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருபவர் சாய் அப்யங்கர். “கட்சி சேர” என்ற…
மடப்புரத்தில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்த…
திரிஷ்யம் படத்தின் ரீமேக் 2013 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான திரைப்படம்…
This website uses cookies.