போலீஸ்காரரை தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்.. போதையில் அராஜகம் ; வீடியோ வெளியாகி பரபரப்பு..!!
சென்னை – அம்பத்தூர் தொழிற்பேட்டை பட்டரவாக்கம் வடக்கு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆயுதப்பூஜை கொண்டாடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 200 வடமாநில இளைஞர்கள், மதுபோதையில் இருபிரிவுகளாக பிரிந்து மாறிமாறி தாக்கி ககொண்டனர்.
இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்நிலைய தலைமை காவலர் ரகுபதி (52) மற்றும் காவலர்கள் ராஜ்குமார், கிரி ஆகியோர் இரு பைக்குகளில் வந்தனர். அப்போது, அங்கு மோதலில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்களை தடுக்க முயன்றனர்.
அந்த சமயம் போதையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள், போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். அவர்களின் வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதில், படுகாயமடைந்த காவலர்கள் ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், போலீசாரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.