நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர், மூர்த்தி, செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மதுரை திண்டுக்கல் தேனி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு உட்பட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசுகையில் “தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும், திருச்செந்தூருக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், பக்தர்கள் அதிக அளவில் வருவதால் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும்” என கூறினார்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் “மழைநீர் வடிகாலோடு சாலை வசதிகள் செய்ய வேண்டும், தமிழகத்தில் ஐந்தரை இலட்சம் எல்.இ.டி விளக்குகள் போடப்பட்டுள்ளன,
கூடுதலாக 1 இலட்சத்து 50 ஆயிரம் எல்.இ.டி விளக்குகள் அமைக்கப்படும், புதிதாக பேருந்து நிலையங்கள், மார்கெட் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும், தமிழகத்தில் ஏற்கனவே 100 அறிவுசார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது,
கூடுதலாக அறிவுசார் மையங்கள் தேவைப்படும் இடங்களில் அமைக்கப்படும், நிலுவையில் குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் வேண்டும், குடிநீர் திட்டங்களை விரைந்து முடிக்க குடிநீர் வடிகால் வாரியம் கடந்த காலத்தை போல அல்லாமல் சுறு சுறுப்பாக செயலாற்ற வேண்டும்” என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில் “ஊரக உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க 120 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியுடன் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை இணைக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மறு ஆய்வு செய்யப்படும்” என கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.