Categories: தமிழகம்

இனி தினமும் இலவசமாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் : சொந்த செலவில் அழைத்து செல்லும் எம்.எல்.ஏ!!

வேலூர் : வேலூர் மக்கள் இனி தினமும் திருப்பதி ஏழுமலையானை இலவசமாக தரிசனம் செய்ய தனது சொந்த செலவில் ஏற்பாடுகளை செய்துள்ளார் அறங்காவல் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார்.

வேலூர் மாவட்டம் திமுக மத்திய மாவட்ட அலுவலகத்திலிருந்து திருமலை திருப்பதிக்கு தினந்தோறும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் இலவசமாக பயணம் செய்து அவர்களுக்கு இலவசமாக தனது சொந்த செலவில் தரிசனம் மற்றும் உணவு வழங்கும் திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு உறுப்பினரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் துவங்கி வைத்தார்.

இந்த வாகனம் தினந்தோறும் 12 பேருடன் சென்று அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ரூ.300 தரிசன கட்டணத்தை அறங்காவல் குழு உறுப்பினர் நந்தகுமார் தனது சொந்த செலவில் செலுத்தி அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி மீண்டும் பாதுகாப்பாக அழைத்து வந்து வேலூரில் கொண்டு வந்து விடுகின்றனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழை மக்கள் யார் வேண்டுமானாலும் இதன் மூலம் இலவசமாக திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்ய முடியும். இதற்கு ஆதார் எண் கொண்டு பதிவு செய்த சில தினங்களில் மக்கள் இலவசமாக அழைத்து செல்லப்பட்டு தரிசனம் முடிந்து அவர்களை மீண்டும் அழைத்து வந்து வேலூரில் விடுகின்றனர்.

மக்கள் இந்த சேவையை பயன்படுத்திகொள்ள வேண்டுமென அறங்காவல் குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றியக்குழு தலைவர் பாபு ஒன்றிய செயலாளர்கள் குமார பாண்டியன். வெங்கடேசன். ஞானசேகர். உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.