நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதோடு, தலைவரான சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்.
இந்நிலையில், திமுக நிர்வாகி ஜெயராமன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சேலம் மாவட்டத்தின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சீமான் அதிகளவில் மது அருந்தி, ஒரே இரவில் 64,000 ரூபாய் பில்லை கட்டாமல் ஓடிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹோட்டல் நிர்வாகம், மாவட்டத்தின் முக்கியவர்களிடம் புகார் தெரிவித்ததாகவும், பின்னர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தங்களால் முடிந்த அளவுக்கு ₹5000, ₹10,000 எனக் கொடுத்து அந்த பில்லின் தொகையை தீர்த்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் கட்சியின் உள்நிலை சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளதோடு, பல நிர்வாகிகள் “இந்த அளவுக்கு அசிங்கப்பட்டு கட்சியில் தொடர வேண்டுமா” என்ற எண்ணத்தில் விலகியதாக ஜெயராமன் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
This website uses cookies.