Categories: தமிழகம்

அரசு மருத்துவமனை முன் செவிலியர் எரித்து கொலை : நெல்லையில் பயங்கரம்.. விசாரணையில் பகீர்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தற்போது வேறு மதத்திற்கு மாறியதாக தெரிகிறது.

இவரது மனைவி அய்யம்மாள் இவர்களுக்கு மூன்று மகன்கள், கணவன்- மனைவியிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது.

இரண்டு மகன்கள் அய்யம்மாளுடனும், ஒரு குழந்தை பாலசுப்பிரமணியனுடனும் வசித்து வந்துள்ளனர். 45 வயதான அய்யம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

பணி நிமித்தமாக மருத்துவமனை அருகே அண்ணாநகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய அவர் அண்ணா நகரில் முக்கிய சாலையில் கத்தியால் குத்தி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். திருநெல்வேலி மாநகர காவல் துறை துணை ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார்.

முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவியிடையே இன்று தகராறு ஏற்பட்டதாகவும், சாலையில் இருவரும் சண்டையிட்டு சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்ததாகவும் தெரியவந்தது.

இந்த நிலையில் கணவன் பாலசுப்பிரமணியன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்தியும், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார் என தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவு செய்த போலீசார் பாலசுப்பிரமணியனை தேடி வருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாலசுப்ரமணியம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியர் ஒருவர் கணவரால் கொலை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?

மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…

15 hours ago

நாளை போர் ஒத்திகை.. தமிழகத்தில் 4 இடங்களை தேர்வு செய்தது மத்திய அரசு!

பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…

15 hours ago

நான் அழவில்லை, தப்பா புரிஞ்சிக்காதீங்க- தனது உடல்நிலையை குறித்து பகீர் கிளப்பிய சமந்தா!

தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

16 hours ago

இனி சந்தானம்தான் ஹீரோ? கௌதம் மேனன் இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாரே? எப்படி இருந்த மனுஷன்!

ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…

16 hours ago

7 வயது சிறுமியை நாயை விட்டு கடிக்க வைத்த அண்டை வீட்டு பெண்.. கோவையில் அதிர்ச்சி!

கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…

17 hours ago

சோபிதா சொன்ன குட் நியூஸ்… விழா எடுத்து கொண்டாட நாகர்ஜூன் குடும்பம் முடிவு?!

நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…

17 hours ago

This website uses cookies.