அநீதி நீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என் விஸ்வரூபம் எடுப்பேன் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்று அறிவித்த பிறகு தென் மாவட்டத்திற்கு, காவி வேட்டி அணிந்தபடி, வருகை தந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பாஜக மாவட்ட செயலாளர்கள் மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வரவேற்பை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அரசியல் கட்சிகள் எண்ணங்களின் பிரதிபலிக்கும் வகையில் தான் தேர்தல் அறிக்கை இருக்கும். அதை யார் நடைமுறை படுத்துகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ராமநாதபுரம் மக்கள் நீதி தர்மத்தின் அடிப்படையில் நீதிகளை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை கடந்த காலத்தின் வரலாறு.
தொண்டர்களின் உரிமையை மீட்கும் தர்ம யுத்தத்தில் நீதி கேட்டு போட்டியிடுகிறேன். அதன் அடிப்படையில் தான் மக்கள் உரிய தீர்ப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில் போட்டியிடுகிறேன். பாஜகவிற்கு எதிரான தேர்தல் அறிக்கையை குறித்து அவர்களிடம் (அதிமுக) கேட்க வேண்டும். அநீதி நீதிக்கு புறம்பாக யார் நடக்கிறார்களோ அவர்களுக்கு எதிராக என் விஸ்வரூபம் இருக்கும். அதிமுக மீட்பு சட்டரீதியாக தொடர் நடவடிக்கை இருக்கும், எனக் கூறினார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.