Categories: தமிழகம்

ஓபிஎஸ் ஒரு சுயநலவாதி.. பதவி தரலைனா கட்சியை அழிச்சுருவனு மிரட்டுவதா? இபிஎஸ்தான் தகுதியானவர் : முன்னாள் எம்பி வலியுறுத்தல்!

தூத்துக்குடி : அதிமுக கட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமை ஏற்று வழி நடத்த வேண்டும் என அக்கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ,முன்னாள் அமைப்பு செயலாளர், தூத்துக்குடி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நட்டர்ஜி தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அதிரடி பேட்டி அளித்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1972 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு எம்ஜிஆர் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் இயக்கம் உச்சம் அடைந்தது. இந்த கட்சியில் இரட்டை தலைமை ஏற்பட்டதன் காரணமாக தொண்டர்கள் பல்வேறு குழப்பத்திற்கு ஆளாகிறார்கள்.

அவருடைய குழப்பம் நீங்க கட்சிக்கு ஒற்றை தலைமை அவசியம் என்று கூறிய அவர், அதிமுக ஒரு பேரியக்கம் அது நல்ல முறையில் வளர எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையேற்றால் வரக்கூடிய தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும் என்று கூறினார்.

இரட்டைத் தலைமை இருப்பதால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். தொண்டர்களின் குழப்பத்தை நீக்க கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் அதுவும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைய வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர் அவரால் தான் இந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்ல முடியும்.
வரும் தேர்தலில் வெற்றியும் பெற முடியும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியையே ஏற்றுக் கொள்ள விரும்புகின்றனர் எனவே அவர்தான் இந்த இயக்கத்தின் தலைவராக வரவேண்டும் .

ஓபிஎஸ் சுயநலவாதி என்று கட்சித் தொண்டர்கள் நினைக்கின்றனர் வணங்கி பணிபவர்கள் எங்களுக்கு தேவையில்லை துணிச்சலாக தொண்டர்களை பாதுகாக்கக்கூடிய தலைவரே இப்போது அதிமுகவிற்கு வேண்டும் இரட்டை தலைமையால் தொண்டர்களுக்கு எந்த ஒரு நன்மையும் நடக்கவில்லை ஓபிஎஸ் கட்சியில் தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழித்துவிடுவோம் என்ற மிரட்டும் தோனிக்கு போய் விட்டார் இது ஏற்புடையது அல்ல.

ஓபிஎஸ் பின்னணியில் சசிகலா அம்மாவின் கை உள்ளது ஓபிஎஸ் தனது மகனை மட்டுமே ஜெயிக்க வைத்துள்ளார். தனது மகனை ஜெயிக்க வைத்த அவருக்கு கூட 2 எம்பி ஜெயிக்க வைக்க தெரியாதா? அதை செய்யவில்லையே. ஓபிஎஸ் இடம் கட்சியை கொடுத்தால் அவர் கட்சியை பிஜேபிக்கு கொண்டு சேர்த்துவிடுவார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

4 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

4 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

4 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

5 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

5 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

6 hours ago

This website uses cookies.