மதுரை மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்ட கோயில்களும் உள்ளன. சில நாட்களுக்கு முன் செல்லத்துரை மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து 21 பெண் அலுவலர்களின் பெயர்களுடன் புகார் கடிதம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த புகார் குறித்து நடந்த விசாரணையில் இந்த பாலியல் புகாரில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்த ஜவஹருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது.
நிர்வாக காரணங்களுக்காக இவரை செல்லத்துரை சில மாதங்களுக்கு முன் ‘சஸ்பெண்ட்’ செய்துள்ளார். இதனால் பணி ஓய்வு பெற முடியவில்லை ஆத்திரமடைந்த ஜவஹர், சக பெண் அலுவலர்கள் 21 பெண்களின் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் தயார் செய்தார்.
கையெழுத்து அடிப்படையில் இது போலி என உறுதி செய்யப்பட்டு ஜவஹர் மீது மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் செல்லத்துரை புகார் அளித்தார். உடன் 21 பெண் அலுவலர்களும் புகார் அளித்தனர்.
ஜவஹர் மீது மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்தல், மோசடியாக ஆவணங்களை தயார் செய்தல் உட்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.