இஸ்லாமிய அமைப்பு தலைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை : 3 மணி நேரத்திற்கு மேல் சோதனையால் மதுரையில் பரபரப்பு!
மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியில் வசித்துவரும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான அலிஜிகாத் (எ) முகம்மது அப்துல் அஜிம் என்பவரது வீட்டிற்கு NIA அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிக்கு விசாரணை நடத்துவதற்காக வருகை தந்தனர்.
NIA அதிகாரிகள் வருகை தந்த நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் காலை 7.30 மணிக்கு மேல் ஹாஜிமார்தெரு சாவடி எதிரேயுள்ள சந்தில் உள்ள ஜிகாத் அலி சகோதரரின் வீட்டில் இருந்த நிலையில் NIA அதிகாரிகள் சோதனையை தொடங்கிய நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக அலி ஜிகாத்டம் விசாரணை செய்துவருகின்றனர்.
இவரிடம் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
NIA அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் திடீர்நகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
NIA அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் அலிஜிகாத் (எ) முகம்மது அப்துல் அஜிம் என்பவரது மீது விளக்குத்தூண் காவல்நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பாக சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.