விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே முதியவரை குடிபோதையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் கூனங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து (60). முதியவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது பேச்சிமுத்து மற்றும் சித்து ஆகிய இரண்டு வாலிபர்களின் செல்போனை எடுத்ததாக கூறி, இரண்டு வாலிபர்கள் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு குடிபோதையில் முதியவரை அடித்தே கொன்றனர்.
இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகில் இருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவினை எடுத்து தப்பிச்சென்ற பேச்சிமுத்து மற்றும் சித்து ஆகிய இரண்டு வாலிபர்களை வலை வீசி தேடி கைது செய்தனர். மேலும், கொலை செய்த இருவரும் குடிபோதையில் இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை என்பது அமோகமாக நடைபெறுவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.