விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே முதியவரை குடிபோதையில் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகில் கூனங்குளம் வடக்கு தெருவை சேர்ந்த மாரிமுத்து (60). முதியவர் வீட்டை விட்டு வெளியே வரும்போது பேச்சிமுத்து மற்றும் சித்து ஆகிய இரண்டு வாலிபர்களின் செல்போனை எடுத்ததாக கூறி, இரண்டு வாலிபர்கள் அதிகாலையிலேயே மது அருந்திவிட்டு குடிபோதையில் முதியவரை அடித்தே கொன்றனர்.
இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பெயரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருகில் இருந்த கடையில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவினை எடுத்து தப்பிச்சென்ற பேச்சிமுத்து மற்றும் சித்து ஆகிய இரண்டு வாலிபர்களை வலை வீசி தேடி கைது செய்தனர். மேலும், கொலை செய்த இருவரும் குடிபோதையில் இருந்ததால் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று கூறுவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை என்பது அமோகமாக நடைபெறுவதால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.