வாணியம்பாடியில் ஆட்டு தொட்டியில் பழைய ஆட்டுகறி விற்றதாக கூறி ஆட்டோ டிரைவர் வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியில் இயங்கி வரும் ஆட்டு தொட்டியில் தினம் தினம் புதியதாக ஆடு வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதனால், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்று ஆட்டுகறி வாங்கி வருகின்றனர்.
நேற்று அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசந்தர் என்பவர் ஆட்டு தொட்டியில் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டுத் தலை வாங்கி வந்ததாகவும், அதனை வீட்டில் சமைக்கும் போது பழைய கறி என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனை ஆட்டோ ஓட்டுநர் ஆட்டு தொட்டிக்கு கறியுடன் சென்று கேட்டுள்ளார். அப்போது, கறி வியாபாரி தவறி வரும் அதை கேட்காதே எனவும், அப்படி தான் பழைய கறி விற்போம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று வாடிக்கையாளரை திட்டியுள்ளார்.
அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்று பழைய கறியை வியாபாரம் செய்யும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…
வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
This website uses cookies.