வாணியம்பாடியில் ஆட்டு தொட்டியில் பழைய ஆட்டுகறி விற்றதாக கூறி ஆட்டோ டிரைவர் வியாபாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோனாமேடு பகுதியில் இயங்கி வரும் ஆட்டு தொட்டியில் தினம் தினம் புதியதாக ஆடு வெட்டி வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதனால், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் சென்று ஆட்டுகறி வாங்கி வருகின்றனர்.
நேற்று அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலசந்தர் என்பவர் ஆட்டு தொட்டியில் ஆட்டுக்கால் மற்றும் ஆட்டுத் தலை வாங்கி வந்ததாகவும், அதனை வீட்டில் சமைக்கும் போது பழைய கறி என தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனை ஆட்டோ ஓட்டுநர் ஆட்டு தொட்டிக்கு கறியுடன் சென்று கேட்டுள்ளார். அப்போது, கறி வியாபாரி தவறி வரும் அதை கேட்காதே எனவும், அப்படி தான் பழைய கறி விற்போம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று வாடிக்கையாளரை திட்டியுள்ளார்.
அப்போது, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது போன்று பழைய கறியை வியாபாரம் செய்யும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.