இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி (XBB) வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
வைரசின் உருமாற்றங்களை கண்காணித்து வரும் ‘கிசியாத்’ (GISIAD) என்ற சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஒமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி வைரஸ் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தமிழகம் உட்பட 9 மாநிலங்களில் எக்ஸ்.பி.பி வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 175 பேர், மேற்கு வங்காளத்தில் 103 பேர் என நாடு முழுவதும் 380 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, ஒடிசா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் இந்த வகை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வைரஸ் உருமாற்றம் ஏதும் தற்போது கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் இருப்பதாகவும் வைரஸ்களின் உருமாற்றம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.