கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக மினி வேனில் நெல்லை வழியாக கன்னியாகுமரி சென்றுள்ளனர். வண்டியில் டிரைவர் உள்பட ஆண்கள் 12 பேர், பெண்கள் இரண்டு பேர் என மொத்தம் 15 பேர் பயணித்துள்ளனர்.
வேன் நெல்லை பாளையங்கோட்டையில் அருகில் உள்ள டக்கரம்மாள் புரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென மினி வேனில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதை உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுனர் கணேசன், அந்த பேருந்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு அனைவரையும் கீழே இறக்கி விட்டுள்ளார்.
அடுத்த சில நொடிகளில் மின் வேன் முழுவதும் மளமளவென தீப்பிடிக்க தொடங்கியது. உடனடியாக ஓட்டுநர் அளித்த தகவலின் பேரில் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் தீ விபத்தால் வேன் முழுவதும் தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்த 15 பேரும் உயிர் பிழைத்தனர். கோயில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க சென்றபோது மினிவேன் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.