கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், தமிழக அரசுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், தென்மாவட்டங்களுக்கு பேருந்து சேவையை அதிகரிக்கும் நோக்கிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி திறந்து வைத்தார்.
கோயம்பேட்டுக்கு மாற்றாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை உருவாக்க தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், சென்னையில் இருந்து 30 கி.மீ. தொலையில் இந்தப் பேருந்து நிலையம் இருப்பதால், சென்னை மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும், அதிகளவிலான இணைப்பு பேருந்துகள் இல்லாததால் பண்டிகை காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சென்னைக்குள் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கோரி ஆம்னி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக போக்குவரத்து துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதாவது, ஆம்னி பேருந்து நிலையம் முழுமையாக கட்டி முடிக்காத நிலையில், சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அவகாசம் கேட்டு ஆம்னி உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரும் 24ம் தேதி உடன் ஆம்னி பேருந்துகள் மாநகர பகுதிக்குள் இயக்கக் கூடாது என போக்குவரத்து துறை உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.